உடல் நலனை மேம்படுத்தும் ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்!!!
ஆப்பிள் பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன எனவும், மருத்துவ
பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம். ஆனால் புளித்துப் போன ஆப்பிள்
பழத்தை கூட மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம் என்று சொன்னால் நம்ப
முடிகிறதா? ஆம் அது உண்மை தான். ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள் பழச்
சாற்றில் இருந்து செய்யப்படும் ஒரு வகை வினிகராகும்.
தமிழில்
இதனை அரத்திக்காடி அல்லது அரத்தி நொதிக் காடி என அழைப்பர். இவ்வகை வினிகர்
புளித்து போன ஆப்பிள் பழங்களில் இருந்து செய்யப்படுகிறது. ஆப்பிள் சீடர்
வினிகரால் புரையழற்சி, காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் குணமாவதால்,
இவ்வகை வினிகரை பல ஆண்டுகளாய் மக்கள் உபயோகித்து வருகின்றனர். ஆப்பிள்
சீடர் வினிகரை தினமும் அருந்தி வந்தால், செரிமானம் மேம்படும் மற்றும் மன
அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும். இவை
மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பின் அளவை
குறைக்கும்.
ஆப்பிள் சீடர்
வினிகர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நவீன
மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates) கி.மு.400 ஆம் ஆண்டு
சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகரை தேனுடன் கலந்து சிகிச்சை
செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். அதிலிருந்து ஆப்பிள் சீடர் வினிகர்
பல்வேறு நோய்களை போக்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள
புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது. மேலும் கிருமி
நாசினியாகவும் பயன்படுத்தக்கூடியது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள
அசிட்டிக் அமிலம் இரைப்பைக் குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும்
பூஞ்சைகளை போக்க வல்லது. மேலும் இது குடலில் உணவு செரிமானத்திற்கும்,
ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள
பெக்டின் (Pectin) என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து
நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு
அப்புறப்படுத்துகிறது.
இப்போது அந்த ஆப்பிள் சீடர் வினிகர், உடலுக்கு வேறு எந்த நன்மைகளை எல்லாம் கொடுக்கும் என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment